Skip to content

குரூப் 1 ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம்  நிரப்பப்படும். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி பல்வேறு போட்டி தேர்வுகளை நடத்தி  வருகிறது.
அந்த வகையில் மார்ச் 28ல் குரூப் 1 தேர்வு பற்றிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. இதன்படி, ஜூன் 15-ல் இந்த பணிகளுக்கான முதல்நிலை தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 7 முக்கிய பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட உள்ளன.
குரூப் 1 தேர்வுக்கு மொத்தம் 70 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஏப்ரல் 30 விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற டி.என்.பி.எஸ்.சி. இணையதளம் மூலம் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்கள், வருவாய் கோட்டாட்சியர் , டிஎஸ்பி, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலர் ஆகிய 8 விதமான பதவிகளில் நியமிக்கப்படுவார்கள்.
error: Content is protected !!