வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாவட்டம் முழுவதும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. வரும் ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் மழையின் தீவிரம் அதிகரிக்கக்கூடும் என்பதால் விவசாயிகள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூர் , மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளனர.

