சசிகலா நாளை தனிக்கட்சி தொடங்குவதாக கூறப்படும் நிலையில் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “நாளை நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும். நல்ல தகவலை சொல்கிறேன். பசும்பொன்னில் நாளை நடக்க இருக்கும் ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முக்கிய முடிவை எடுக்க இருக்கிறேன்” என்றார்.

