இந்தியா- இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை தொடங்க உள்ளது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
2வது டெஸட் ஜூலை 2ம் தேதி பர்மிங்காமில் நடக்கிறது. 3வது டெஸ்ட் ஜூலை 10ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்திலும், 4வது டெஸ்ட் ஜூலை 23ம் தேதி மான்செஸ்டரிலும், இறுதியாக 5வது போட்டி ஜூலை 31ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்திலும் நடக்கிறது.
கிரிக்கெட் ஜாம்பவான்கள் ரோகித், கோலி , அஸ்வின் இல்லாத நிலையில், புதிதாக டெஸ்ட் கேப்டன் பொறுப்பேற்றுள்ள இந்திய அணி கில் தலைமையில் லண்டன் சென்றுள்ளது. இந்திய அணியில் அனுபவம் மிக்க வீரர்கள் இல்லை . அதனால் இங்கிலாந்து வெற்றி பெறும் என பெரும்பாலான இங்கிலாந்து அணி முன்னாள் வீரர்கள் கருத்து கூறி உள்ளனர்.
“இந்திய அணி மீண்டும் தோல்வியடைய வந்துள்ளது” என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் வாகன் கூறியுள்ளார்.
“இந்தியாவுக்கு எதிரான இந்த தொடர் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்கான சிறந்த பயிற்சியாக இருக்கும் என்று முன்னாள் வீரர் ஸ்வான் கூறி உள்ளார்.