சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பெங்களூரில் திரிபுரன வாசனி பேலசில் உலக யோகா தினம் அக்சர் யோகா கேந்திரா சார்பில் 12 கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது இதில் திருச்சியைச் சேர்ந்த ஜெட்லி மார்ஷல்ஆர்ட்ஸ்கூல் மற்றும் ஜெட்லி புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஸ்ரீமதி திருச்செந்துரைஅரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கமலாதேவி தொட்டியம் புனித மாதா உயர்நிலைப்பள்ளி மாணவர் மேகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இந்தியா தைவான் மலேசியா. ஜப்பான் சிங்கப்பூர்துபாய் பல நாடுகளைச் சேர்ந்த யோகா ஆர்வலர்களும் சுமார் 2000 பேர் கலந்து கொண்டனர். இதில் சர்வாங்காசனம் உட் கட்டாசனம் வாரியர் போஸ்1.2.3. பிரிட்ஜ் போஸ் உபயோ படங்குசாசனா அதோ முக சபலாசனா பத்ராசனா ஏகபாத படகு குஷ்டாசனா வுட் கட்டாசனா சல பாசனா கருடாசனா ஏகபாத ராஜ கபோர்டு ஆசனா வீரபத்ராசனம் 2,3 சேதுபந்த சர்வாங்காசனா மேலும் பல்வேறு யோகாசனங்களை செய்தனர். இதில் 12 கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினர். இவற்றை நேரில் ஆய்வு செய்து லண்டனில் உள்ள கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் இரண்டு பேர் அக்ஷார்ஜியிடம் நிறுவனர் மற்றும் கிராண்ட் மாஸ்டர்அக்சர் யோக கேந்திரா விடம் 12 கின்னஸ் உலக சாதனை சான்றிதழ் அளித்தனர் பங்கேற்றவர்களுக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் பதக்கமும் வழங்கப்பட்டது. கின்னஸ்உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி ஸ்ரீமதி மேகநாதன் ஆகியோர் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைசந்தித்து வாழ்த்து பெற்றனர். யோகாவில் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்குபிரபல கராத்தே யோகா கிராண்ட் மாஸ்டர் டிராகன் ஜெட்லீ பயிற்சி அளித்தார்.
சர்வதேச யோகா தினம்.. திருச்சி மாணவிகள் 12 கின்னஸ் உலக சாதனை
- by Authour
