Skip to content

சர்வதேச யோகா தின கொண்டாட்டம்… ஆயிரம் மாணவர்கள் யோகா செய்து அசத்தல்

  • by Authour

சென்னை விருகம்பாக்கம் மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் 2025 கொண்டாடப்பட்டது. இதில் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள மாணவ மாணவிகள் கற்பித்தல் ஊழியர்கள் துப்புரவு பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் யோகா விழிப்புணர்வில் கலந்து கொண்டு யோகாசனம் செய்து அசத்தினார்கள். மேலும் நிகழ்வில் யோகாசனம் செய்வதால் ஏற்படும் நலன் குறித்து ஏற்படுத்தப்பட்டது. இதில் முக்கிய நிகழ்வாக மாணவர் ஒருவர் கபோதாசனம் என்ற மேம்பட்ட யோகா ஆசனத்தில் ஒரு மணி நேரம் ஏழு

நிமிடம் விட்டு வினாடிகள் தொடர்ச்சியாக இருந்து இந்தியா புத்தக உலக சாதனையில் இடம் பிடித்தார். சர்வதேச யோகா தினம் கொண்டாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தது காண்போரை நெழ்ச்சியில் ஆழ்த்தியது..

error: Content is protected !!