Skip to content

ஐபிஎல் இறுதிப்போட்டி : ஆர்சிபி, பஞ்சாப் இன்று மோதுகிறது

18-வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ம் தேதி தொடங்கியது. மொத்தம் நடைபெற்ற 70 லீக் போட்டிகளின் முடிவில் பெங்களூரு, பஞ்சாப், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களைப் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இறுதிப்போட்டிக்குள்   பெங்களூரு, பஞ்சாப் அணிகள்   நுழைந்தன. இந்த இரு அணிகள் தான் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு அணிகளும் இதுவரை 36 போட்டிகளில் ஆடி தலா 18 வெற்றிகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.  37வது போட்டியில் (ஐபிஎல் இறுதிப்போட்டி) இன்று இரவு7.30 மணிக்கு  ஆமதாபாத்தில் மோத இருக்கின்றன.

இந்த முறை வெற்றி பெறும் அணி, முதன்முறையாக கோப்பையை  வெல்லும் அணியாக இருக்கும்.

இரு அணிகளுமே பலம் பொருந்திய அணிகள் என்பதில் சந்தேகம் இல்லை. இருஅணிகளுமே கோப்பைக்காக  காத்திருக்கிறது. பலம்கொண்ட மட்டும் மோத ஆயத்தமாய் இருக்கிறது.  பெங்களூரு  அணி வெற்றி பெற வேண்டும் என கர்நாடக துணை முதல்வர், ஆர்சிபி ஜெர்சியுடன் வீடியோ  வெளியிட்டு உள்ளார்.

முன்னதாக மாலை 6 மணிக்கு நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. பின்னணிப் பாடகர் சங்கர் மகாதேவன் கலந்துகொண்டு, இந்தியராணுவப்படையினரின்புகழைப் பாடவுள்ளார். ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இடம்பெற்றிருந்த ராணுவ வீரர்களை கவுரவப்படுத்தும் விதமாகவும், பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இசை நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்று ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20| கோடி கிடைக்கும். 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.13 கோடியும், 3-வது இடம் பெறும் அணிக்கு ரூ.7 கோடியும், 4-வது இடம் பெறும் அணிக்கு ரூ.6.5 கோடியும் கிடைக்கும்.

பெங்களூரு  வெற்றிபெறும் என சேவாக் கணித்து உள்ளார்.

 

error: Content is protected !!