ஐபிஎல் போட்டி கடந்த 18 வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி மார்ச் 22ல் தொடங்கி, ஜூன் 3ம் தேதி நிறைவடைந்தது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றன.
பொதுவாக கிரிக்கெட் போட்டி பணம் கொழிக்கும் ஒரு போட்டியாக இருக்கிறது. இது ஐபிஎல் போட்டிக்கும் பொருந்தும்.
ஐபிஎல் 2025 போட்டி தொடரின் மூலமாக இந்த போட்டியை நடத்தும் இந்திய கிரிக்கெட் வாரியமான, பிசிசிஐக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிசிசிஐயின் பெரும்பான்மையான வருமானம் ஒளிபரப்பு கட்டணத்தில் தான் உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடருக்கு ஒளிபரப்பு கட்டணமாக 9,678 கோடி ரூபாயை வயாகாம் 18 நிறுவனத்தின் மூலமாக பிசிசிஐ பெற்றுக் கொண்டது.
டைட்டில் ஸ்பான்சர்ஷிப் வருவாய் மூலம் இந்த தொடரில் 500 கோடி ரூபாயை பெற்றது பிசிசிஐ.
5 ஆண்டுகளுக்கு டைட்டில் ஸ்பான்சர்சிப் 2500 கோடி ரூபாயை டாடா நிறுவனம் பிசிசிஐக்கு 5 ஆண்டுகளுக்கு வழங்குகிறது.
மை 11 சர்க்கிள், ஏஞ்சல் ஒன், ரூ ரூபே, ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் பார்ட்னர், சீயட் டயர்ஸ், அஃபிஷியல் அம்பையர் பார்ட்னர், வொண்டர் சிமெண்ட், ஆரஞ்சு பர்பிள் கேப் பார்ட்னர், ஆராம்கோ உள்ளிட்ட முக்கிய ஸ்பான்சர்ஷிப் மூலமாகவும் பிசிசிஐக்கு வருமானம் கிடைக்கிறது.
2023 ம் ஆண்டு பிசிசிஐக்கு சுமார் ரூ. 16,493 கோடி கிடைத்ததாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் பிசிசிஐ 20 ஆயிரத்து 686 கோடி ரூபாய் வரை பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
