இஸ்ரேல் – ஈரான் நாடுகள் இடையே கடந்த 3 தினங்களாக கடுமையான போர் நடந்து வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் 2வது மகன் அவ்னெர் நெதன்யாகுவுக்கும், அமித் யார்தெனி என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற இருந்தது. போர் நேரத்தில் திருமணம் நடத்தினால் சரியாக இருக்காது என நெதன்யாகு கருதிய நிலையில், காசாவில் உள்ள பிணைகைதிகளை இன்னும் மீட்கவில்லை, பிரதமர் வீட்டில் திருமணமா என மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த திருமணத்தை நெதன்யாகு ஒத்திவைத்தார்.