ராஜ்கமல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள தக்லைப் திரைப்படம் வரும் 5ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது. இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் சென்னையில் நடந்தபோது நடிகர் கமல், தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம் என்றார். இதற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. கமலஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் தகலைப் திரைப்படத்தை கர்நாடகத்தில் திரையிட விடமாட்டோம என கர்நாடக கலாச்சாரத்துறை அமைச்சர் கூறினார்.
அதன்படி கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தக் லைப் படத்தை கர்நாடகத்தில் திரையிட மாட்டோம் என அறிவித்தது. இந்தநிலையில் ராஜ்கமல் நிறுவனம் கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது. அதில் கர்நாடகத்தில் வரும் 5ம் தேதி தக்லைப் திரைப்படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். காவல்துறை, வர்த்தக சபை, மாநில அரசு மூலம் எந்தவித இடையூறும் ஏற்படுத்த கூடாது என கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
திரைப்பட வர்த்தக சபை, காவல்துறை, மாநில அரசு