Skip to content

தூத்துக்குடி வெள்ளப்பகுதியில் கனிமொழி எம்.பி. தீவிரம்

வரலாறு காணாத கனமழையால் நிலைக்குலைந்திருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் பல பகுதிகள் மிக மோசமான பாதிப்பை சந்தித்து உள்ளது, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி  நேராக டில்லியில் இருந்து தூத்துக்குடி வந்து  நிவாரணபணிகளில் இறங்கினார். அங்கேயே முகாமிட்டு வெள்ளப்பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணபணிகளை  தீவிரப்படுத்தி வருகிறார்.

தூத்துக்குடி – திருச்செந்தூர் சாலையில் மேற்கொள்ளப் பட்டுவரும் மீட்பு பணிகளை இன்று  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களை சந்தித்து அவர்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை வழங்கியும் அவர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்தும் வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!