முன்னாள் முதலமைச்சர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா இன்று கரூர் மாவட்டத்தில் விமரிசைாக கொண்டாடப்பட்டது. முன்னாள் அமைச்சரும், மாவட்ட திமுக செயலாளருமான செந்தில் பாலாஜி உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் 161 இடங்களில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்ட திமுக சார்பில் 161 இடங்களில் கலைஞர் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதனைத் தொடர்ந்து அன்னதானம் . நலத்திட்ட உதவிகள் வழங்குதல், நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக வெண்ணைமலை பகுதியில் உள்ள அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
பசுபதிபாளையம் பகுதியில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு பொதுமக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் மற்றும் பிரியாணி வழங்கப்பட்டது. இதே போல் பல்வேறு இடங்களில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி சிறப்பாக செய்திருந்தார்.

