Skip to content
Home » கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

கரூரில் நிலஅளவைத் துறை காலி பணி இடங்களை நிரப்ப கோரி தர்ணா….

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற தர்ணா போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் ஞானத்தம்பி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஆர்பாட்டத்தில்,களப் பணியாளர்களின் பணி சுமையை குறைத்திட வேண்டும், நில அளவை சார்ந்து அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும், கடுமையான பணிச்சுமையை வேலை பார்க்கும் நில அளவர்கள் மீது நிலுவை மனுக்களை காரணம் காட்டி குற்றக்குறிப்பாணை, மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிட வேண்டும்,
நில அளவர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனி பட்டாவை தவிர்க்கும் பத்திரப்பதிவுதாரர்கள் இனம் கண்டு பட்டா மனுக்களை பத்திரப்பதிவுத்துறை மூலம் வட்டாட்சியர் அலுவலகம் அனுப்புவதை நிறுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கம் எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!