கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே உள்ள ஆத்தூர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு பட்டவர் சோளியம்மன் ,முத்து சுவாமி, முனியப்பன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பெரிய பூஜை என்னும் பட்டவர் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முக்கிய நிகழ்வாக 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட மாவிளக்கு பூஜை மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
முன்னதாக அருள்மிகு பட்டவர் மற்றும் சோளியம்மன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது அதனை தொடர்ந்து சுவாமிகளுக்கு வண்ண மாலைகள் அணிவித்து சிறப்பு பூஜை நடைபெற்றது பின்னர் பொங்கல் வைத்து மாவிளக்கு பூஜை
நடைபெற்றது இதில் ஏராளமான ஆண்கள் பெண்களுக்கு சுவாமி ஆடினார்.
அதனை தொடர்ந்து ஆலயத்திலிருந்து மேல தாளங்கள் முழங்க சுவாமி திருவீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஆத்தூர் பகுதி முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற திருவீதி உலாவில் பெண்கள் குழந்தைகள் என ஏராளமானோர் நடனம் ஆடினர் மகிழ்ந்தனர்
வழிநெடுகிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.