Skip to content

கரூர் அருகே 60 அடி கிணற்றில் விழுந்த பசு பத்திரமாக மீட்பு…

கரூர் மாவட்டம், வெள்ளியனை அடுத்த தாளியாப்பட்டி கிராமத்தில் பெரியசாமி என்பவருக்கு சொந்தமான பசு மாடு எதிர்பாராத விதமாக 60 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துவிட்டதாக கரூர் தீயணைப்பு மீட்புப் பணிகள் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில், கரூர் தீயணைப்பு நிலைய உதவி

மாவட்ட அலுவலர் திருமுருகன் தலைமையில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் கயிறு மூலம் பசு மாட்டை கட்டி அனைவரும் ஒன்று சேர்ந்து மேலே இழுத்து பத்திரமாக மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!