கரூர் மாவட்டம் வாங்கல் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் முகாமினை முன்னாள் அமைச்சர் செந்தல் பாலாஜி தொடங்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து முன்னாள், அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில் 4 ஆண்டுகளாக வேளாண் கல்லூரியை திருமண மண்டபத்தில் நடத்திவருவதாக தமிழக அரசை கண்டித்து கரூரில் நேற்று அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர்.
40 ஏக்கர் பரப்பளவில் 84 கோடி ரூபாய் மதிப்பில் அரசு வேளாண் கல்லூரி மிக பிரம்மாண்டமான முறையில் அமைக்கப்பட உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவை அறிவிப்பார்
இவ்வாறு செந்தில் பாலாஜி கூறினார்.
