Skip to content

கரூர் சம்பவம்… யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.

விஜய் பரப்புரை உயிரிழப்புகள் தொடர்பாக பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய யூடியூபர் ஃபெலிக்ஸ் கைது.

தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்து இருந்தனர். இந்த நிலையில், பிரபல யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். கரூர் சம்பவம் குறித்து தனது யூடியூப் சேனலின் அவதூறு பரப்பும் வகையில் பேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நேற்று (செப்.29) இரவு தவெக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அதிகாலையில் பத்திரிக்கையாளர் பெலிக்ஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.. இந்த சம்பவம் தொடர்பாக அவதூறு தகவல்களை பரப்பிய 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஏற்கனவே 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!