Skip to content

கரூரில் கனமழை… சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்…

  • by Authour

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கனமழை பெய்து வருகிறது. இன்று கரூர் மாவட்டத்தில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவு வேலையில் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

கரூர் மாநகர், தான்தோன்றிமலை, காந்திகிராமம், வெங்கமேடு, பசுபதிபாளையம், வேலாயுதம்பாளையம், மணல்மேடு, அரவக்குறிச்சி,

சின்னதாராபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு வேலையில் கனமழை மற்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கனமழையின் காரணமாக சாலையில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!