Skip to content

கரூர் அருகே ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு 1 லட்சம் வளையலால் அலங்காரம்..

  • by Authour

ஆடிப்பூரத்தை முன்னிட்டு பல்வேறு அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் வளையல் அலங்காரங்கள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாவட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சுவாமி வாராஹி அம்மனுக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன் நெய்,இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், அபிஷேகப் பொடி, குங்கும், பன்னீர், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்ற அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் மற்றும் ஆலயம் முழுவதும் ஒரு லட்சம்

வலையினால் சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் வாராஹி அம்மனுக்கு உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறிய பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

கரூர் உழவர் சந்தை அருள்மிகு ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஆடிப்பூர சிறப்பு வலையில் அலங்கார நிகழ்ச்சியை காண கருர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!