Skip to content

கோவை கொடீசியாவில் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா

மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு  முன் சென்னை  அண்ணா  அறிவாலயத்தில்  முதல்வர் ஸ்டாலின் தலைமையில், திமுக நிர்வாகிகள்,  புதிய எம்.பிக்கள் கூட்டம் நடந்தது. இதில்  திமுக  முப்பெரும் விழா நடத்துவது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அதாவது தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு நன்றிதெரிவிக்கும்வகையில்  முப்பெரும் விழாவை கோவையில் 14ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

பின்னர்   இந்த விழா வரும் 15ம் தேதி(சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டது அன்றைய தினம் மாலை இந்த விழா கோவை கொடீசியாவில்  நடைபெறும்  என்றும், விழாவில் புதிய எம்.பிக்கள் 40 பேரும் பங்கேற்பார்கள் என   தெரிவிக்கப்பட்டுள்ளது.  விழா ஏற்பாடுகளை அமைச்சர் முத்துசாமி  தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!