கரூர் மாவட்டம், குளித்தலை சண்முகா நர்சிங் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு படித்து வந்த நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, தீவெட்டுகாட்டுப்பட்டியை சேர்ந்த பாதிக்கப்பட்ட சிறுமியை அந்த கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார், (53) என்பவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு செந்தில்குமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டு தற்சமயம் வரை திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்து வருகிறார்.
இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு கரூர் கூடுதல் அமர்வு மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று, இன்று கைது செய்யப்பட்ட நர்சிங் கல்லூரியின் முதல்வாரன செந்தில்குமார் என்பவருக்கு போக்சோ குற்றத்திற்காக 23 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000/- அபராதமும் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7,00,000/- நிவாரணம் அளிக்க நீதிபதி தங்கவேல், கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் (மகிளா நீதிமன்றம்) தீர்ப்பு வழங்கியது.
மேற்கண்ட வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளியை துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
