Skip to content

42 வருடத்திற்கு பிறகு பங்காளிகள்-மாமன் மச்சான் உறவினர்கள் நடத்திய கும்பிடு விழா…

ஸ்ரீ வெங்கட்ராமன் பெருமாள் சுவாமி திருக்கோவில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் 42 வருடங்களுக்குப் பிறகு பங்காளிகள் மற்றும் மாமன் மச்சான் உறவினர்கள் ஒன்று கூடி நடத்தும் பெரிய கும்பிடு விழா, அடுத்த தலைமுறையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என உறவினர்கள் வேண்டுதல். பொள்ளாச்சி – ஜூன் – 27 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை இரமண முதலி புதூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாத பூமி நீளா சமேத ஸ்ரீ வெங்கட்ராமண பெருமாள் சுவாமி திருக்கோவில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் கோவிலில் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூக மங்களரிஷ கோத்திரம் ஸ்ரீ ரங்க மக்கடையார் குலதெய்வம் வழிபாடு 1925 ஆம் ஆண்டு முதல் பெரிய கும்பிடு விழா நடைபெற்றது அதன் பிறகு 42 வருடங்களுக்குப் பிறகு பங்காளி மற்றும் மாமன் மச்சான் உறவினர்கள் என ஒன்று கூடி பெரிய கும்பிடு விழா நடைபெறுகிறது மூன்று நாட்கள் சிறப்பாக நடைபெறும் இந்த விழா வாகும் முதல் நாள் கெங்கம்பாளையம் அருகில் உள்ள பாலாற்றங்கரையில் பாத்து பத்திரகாளி அம்மன் கோவிலில்

இருந்து உறவினர்கள் பிறந்து வீட்டில் இருக்கும் பெண்கள் திருத்தம் கொண்டுவரப்பட்டு பராசபை கூடி தலைக்கட்டு வாரியாக உறவினர் அவர்கள் விவரம் சரிபார்க்கப்பட்டு வாய்க்கால் மேட்டில் புகை தண்ணீர் மற்றும் சுத்த தண்ணீர் ஊற்றுதல் விழா நடைபெறும் இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் மேல் சட்டை அணியாமல் வழிபாடு செய்ய வேண்டும் குழந்தைகளுக்கு பால் மற்றும் மாட்டு கோமியம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு உறவினர்கள் மீது குருமார்கள் மூலம் தெளிக்கப்படும் இரண்டாம் நாள் தலைக்கட்டு வாரியாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு செந்நெல், நெய் கொண்டு வந்து பெருமாள் வைக்கப்பட்டு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் உற்சவமூர்த்திகளுக்கு திருமஞ்சனம் திரு ஊஞ்சல் நடைபெற்று பாடல் இன்னிசைக் கச்சேரி நடத்தப்படும் மூன்றாம் நாள் ஸ்ரீ வெங்கட்ராமன் பெருமாளுக்கு அன்னாபிஷேகம் செய்து திருவீதி உலா வருவர் ஸ்ரீ வீரமாத்தி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்று கடைசியாக சக்தி கும்பம் பக்தர்களுக்கு கங்கையில் கொண்டு செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்படும் தெரிவித்தனர் இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் தமிழ்நாடு கேரளா மற்றும் பிள மாநிலங்களில் இருக்கும் மாமன் மச்சான் சித்தப்பா பெரியப்பா மற்றும் உறவினர்கள் 42 வருடங்களுக்குப் பிறகும் பெரிய கும்பிட்ட நிகழ்ச்சி மகிழ்ச்சியுடன் குடும்பத்துடன் கலந்து கொண்டனர் மேலும் அடுத்த தலைமுறையும் இந்தப் பெரிய கும்பிடு நிகழ்வில் மீண்டும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்

error: Content is protected !!