Skip to content

வால்பாறை அருகே வனத்துறை கூண்டில் சிக்கிய சிறுத்தை

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறையில் சுமார் 54 எஸ்டேட்டுகள் உள்ளன. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியில் தமிழ்நாடு, கேரளா, பீகார், ஜார்கண்ட் உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் 35000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தலைமுறை, தலைமுறையாக தங்கியிருந்து வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் அந்தந்த எஸ்டேட்டுக்குச் சொந்தமான குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள், புலி, சிறுத்தை, கரடி நடமாட்டம் அதிகம் உள்ளன. இந்த நிலையில் வால்பாறை அருகே உள்ள பச்சைமலை எஸ்டேட்டில் கடந்த (ஜூன் 20) மாலை, வடமாநில பெண் தொழிலாளி வீட்டின் பின்புறம் தன்னுடைய 6 வயது மகளுடன் தண்ணீர் பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.

அவர் தண்ணீர் குடத்தை வீட்டில் வைத்துவிட்டு திரும்பி வருவதற்குள் வெளியே நின்றுகொண்டிருந்த சிறுமியின் அருகே பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து சிறுமியை இழுத்துச் சென்றுள்ளது.

தன்னுடைய கண் முன்னே மகளை சிறுத்தை இழுத்துச் செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டு கத்தியுள்ளார்.

இவரது அலறல் சத்தம் கேட்டு உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டனர் கோவை மாவட்ட ஆனைமலை புலிகள காப்பகம் கள இயக்குனர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் துணைக்கள இயக்குனர் தேவேந்திர குமார் உத்தரவின் பேரில் வனச்சரகர்கள் கிரிதரன் சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் மோப்ப நாய்கள் கொண்டுவரப்பட்டு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் சிறுத்தை பிடிக்க கோரிக்கை வைத்ததின் பெயரில் பச்சைமலை எஸ்டேட் பகுதியில் வனத்துறையினர் சிறுத்தை பிடிக்க இறைச்சிகள் வைத்து கூண்டும் இரண்டு இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு வனத்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தனர் நேற்று வனத்தை விட்டு இரவு வெளியே வந்த சிறுத்தை வனத்துறை வைத்த கூண்டில் சிக்கியது வனத்துறையினர் அப்பகுதி பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது மேலும் சிறுத்தையை அக்கா மலை மானாம்பள்ளி மந்தி மட்டம் அடர் வனப்பகுதியில் விடுவதாக வனத்துறையினர் ஆலோசனை ஈடுபட்டு வருகின்றனர் தற்போது சிறுத்தை சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது .

error: Content is protected !!