மதுரை: 4 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனையை ஐகோர்ட் கிளை உறுதி செய்தது. 2018ல் ராமநாதபுரம் கமுதியில் 4வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கந்தசாமி என்பவர் கைது செய்யப்பட்டார். குற்றவாளி கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. சிறப்பு நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கந்தசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

