துபாயில் கார் பந்தயத்திற்காக அஜித் தங்கியிருந்தார். அப்போது துபாயில் தாக்குதல் நடத்தப்பட்டதால் சென்னை திரும்ப முடியாமல் அஜித் துபாயில் சிக்கிக்கொண்டார்.
அஜித் பாதுகாப்பாக இருப்பதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அஜித் பாதுகாப்பாக சென்னை திரும்பினார்.
அஜித் சென்னை திரும்பிய நிலையில், அஜித் குமாருக்கு உலகின் முதல் Formula E Themed SUV காரை மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவு தலைவர் ஆர்.வேலுசாமி பரிசாக வழங்கியுள்ளார். நடிகரும் கார் ரேசருமான அஜித் குமாரின் ரேசிங் மீதான ஆர்வத்தை பாராட்டும் வகையில், மஹிந்திரா BE FORMULA E EDITION கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

