சென்னை, குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் தமிழரசன் இவர் கடந்த 17ஆம் தேதி அம்பத்தூர் வாவின் பகுதியில் உள்ள bmw கார் ஷோரூமில் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்குவதற்காக 27 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளார்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பிஎம்டபிள்யூ கார் வழங்குவதாக ஷோரூமின் மேலாளர் தெரிவித்துள்ளார். கார் வாங்க வந்த தமிழரசனுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகைநில் கார் ஷோரூம் மேலாளர் கார் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த தமிழரசன் என்னிடம் பணம் பெற்றுக்கொண்டு வேறு ஒருவரிடம் எப்படி கொடுக்க முடியும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இன்று தமிழரசன் தன்னுடைய வழக்கறிஞர்களுடன் கார் ஷோரூமில் அதிகாரிகளை கார் தொடர்பாக கேட்கும் பொழுது கார் வேறொரு விற்பனை செய்ததாகவும் பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளனர். 27 லட்சம் ரூபாய் குறித்து கேட்கும் பொழுது நாங்கள் கொடுக்க முடியாது டெல்லியில் தான் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் போது போலிஸ்சாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடமும் பேசி சென்றனர்.
புகார் தொடர்பாக தமிழரசனின் வழக்கறிஞர் பொன்லிங்கம் பேசுகையில்,
தமிழரசன் 27 லட்ச ரூபாய் கொடுத்து காரை பதிவு செய்துள்ளார். ஷோருமின் மேலாளர் கடந்த சனிக்கிழமை காரை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார். இது குறித்து கேட்கும் பொழுது ஷோரூம் மேலாளர் தமிழரசினிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு வேருவருக்கு காரை விற்பனை செய்துள்ளார். இரண்டு பேரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு ஒருவருக்கு காரை விற்பனை செய்த மேலாளர் மீது குற்ற வழக்கை பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழரனிடம் பெற்ற திரும்ப கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.