உறையூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் கல்நாயக்கன்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை பிடித்து விசாரணை நடத்திய போது, போதை மாத்திரைகள் விற்பனை செய்பவர்கள் என்பது தெரியவந்தது பின்னர் அவர்களை கைது செய்தனர்.
கைதானவர்கள் உறையூர் மேல கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் 22
உய்யக்கொண்டான் திருமலை கிழக்கு தெரு பகுதியை சேர்ந்த கோபி சங்கர் 21 என்பது தெரியவந்தது.
அவர்களிடமிருந்து 20 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டது.
இதேபோன்று மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் அரியமங்கலம் ரத்தினசாமி தெரு பகுதியில்,
கஞ்சா விற்பனை செய்த
அரியமங்கலம் உக்கடை தீப்பெட்டி கம்பெனி தெரு பகுதியைச் சேர்ந்த ஷகிலா பானு கைது செய்தனர் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

