மயிலாடுதுறையில் மகளிர் திட்டம் சார்பில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழாவை தொடக்கி வைத்ததை தொடர்ந்து மயிலாடுதுறையில் மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தின விழாவில் 836 மகளிர் சுய உதவிக் குழுக்களை சார்ந்த 8,395 பயனாளிகளுக்கு ரூ.53.26 கோடி மதிப்பில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டது. இதனை ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எம்எல்ஏக்கள் ராஜகுமார், நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் பயனாளிகளுக்கு வழங்கினார். மேலும், இந்நிகழ்ச்சியில், மகளிர் சுய உதவிக்குழுவிற்கு சிறப்பாக கடனுதவி வழங்கிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தொடக்க கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.