மக்கள் தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம் குறித்து இன்று நாடெங்கும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் மயிலாடுதுறையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ஏ.பி.மகாபாரதி கொடி அசைத்து தொடக்கி வைத்தார். முன்னதாக, அனைவருக்கும்
குடும்ப நலத்திட்ட விளக்க கையேடு வழங்கப்பட்டு, அனைவரும் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதில், செவிலியர் கல்லூரி மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகளின் வழியே பேரணியாக சென்றனர்.