Skip to content
Home » மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

மெடிக்கல் ஷாப் ஊழியரின் வங்கி கணக்கில் ரூ.753 கோடி…. மேலும் ஒரு ஷாக்..

  • by Senthil

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த முகமது இத்ரிஸ் என்பவர் மெடிக்கல் ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று தனது வங்கி கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு 2000 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ளார். இதனை தொடர்ந்து அவருக்கு குருஞ்செய்தி வந்த நிலையில், அந்த குருஞ்செய்தியில் 753 கோடி ரூபாய் வங்கி கணக்கில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது இத்ரிஸ் உடனடியாக வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரது வங்கி கணக்கை முடக்கிய வங்கி அதிகாரிகள் இது தொடர்பாக இத்ரிஸ்க்கு உரிய தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. தனது வங்கி கணக்கு முடக்கப்பட்டதால அதிர்ச்சி அடைந்த இத்ரிஸ் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கவுள்ளதாக கூறியுள்ளார்.

கடந்த சில நாடகளுக்கு முன்னர் சென்னையை சேர்ந்த கார் ஓட்டுநர் ராஜ்குமார் என்பவரின் வங்கி கணக்கிற்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கார் ஓட்டுநர் ராஜ்குமார் சென்னை காவல் ஆணையர் ஆலுவலகத்தில் புகார் அளித்தார். இதேபோல் நேற்று தஞ்சாவூரை சேர்ந்த கணேசன் என்பவரது வங்கி கணக்கில் 756 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!