Skip to content

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து குறைந்தது

காவிரி டெல்டா பாசன பகுதிகளில் நீர் ஆதரமான மேட்டூர் அணையில் இந்த ஆண்டு 100அடிக்கும் மேல்  அதிகமான நாட்கள் நீர் தேக்கப்பட்டு இருந்தது.  குறுவை சாகுபடிக்கு அணை  திறக்கும்போது நீர்மட்டம் 114 அடியாக இருந்தது.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை  முன்னதாகவே தொடங்கிய நிலையில் கேரளா,  கர்நாடக மாநிலங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் அங்குள்ள அணைகள் நிரம்பி, உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்ததால் நேற்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணை  தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அதைத்தொடர்ந்து 16 கண் மதகு வழியாக உபரிநிர் திறக்கப்பட்டது.

 ஜூன் மாதம் 30ம் தேதியே அணை நிரம்பியது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இதற்கு முன் 1957ம் ஆண்டு தான் ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை  தனது  முழு கொள்ளளவை எட்டியது. அதற்கு பின்னர் , அதாவது 67 வருடத்திற்கு பின்  ஜூன் மாதத்தில் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

92 வருட அணை வரலாற்றில் நேற்று நிரம்பியது  44வது முறையாகும். கடந்த அண்டு மட்டும் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இந்த ஆண்டும்  அதிகமான முறை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

நேற்று மாலையில் மேட்டூர் அணைக்கு  வினாடிக்கு  58,324 கனஅடி தண்ணீர் வந்தது.  ஆனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58,105 கனஅடியாக குறைந்து விட்டது.  அதே நேரத்தில் இன்று  காலை மேட்டூர் அணையில் இருந்து  வினாடிக்கு 43,429 கனஅடி  தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக காவிரி கரையோர கமக்களுகு்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

error: Content is protected !!