கடந்த 4 ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்திற்க்கு வந்த நடிகர் விஜயை காண வந்த இளைஞர் இருவர் விபத்துக்குள்ளாகி அதில் விக்னேஷ் என்ற கல்லூரி மாணவர் தலையில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த நிமிடம் வரை விஜய் கட்சியில் இருந்து அவரை பார்க்க யாரும் வராத சூழலில், தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவரை நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், அவருடைய மருத்துவ செலவுகளையும் கவனித்துக்கொள்வதாக உறுதி அளித்துள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.. தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி மற்றும் மருத்துவர்கள் உடன் இருந்தனர்..

