Skip to content

ஆபரேசன் முடிந்தது… அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது….

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் 5 மணி நேரமாக மேற்கொள்ளப்பட்டு வந்த பைபாஸ் அறுவை சிகிச்சை தற்போது நிறைவு பெற்றுள்ளது. அதிகாலை 5.15 மணிக்கு தொடங்கிய அறுவை சிகிச்சை காலை 10 மணி அளவில் நிறைவடைந்தது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.  அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி தற்போது மயக்க நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை

தொடர்ந்து அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்தவமனை நிர்வாகம் அறிக்கை வௌியிட்டுள்ளது.  செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமனியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!