திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த காளிப்பட்டியில் தமிழக முதல்வர் அறிவிப்பின்படி புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பெரம்பலூர் தொகுதி எம்பி அருண் நேரு அடிக்கல் நாட்டினார் . அருகில் எம்எல்ஏ ஸ்டாலின் குமார், முன்னாள் ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், நகர செயலாளர் முரளி ,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை ,வீரபத்திரன், சரவணன் ,உப்பிலியம் ஒன்றிய செயலாளர் முத்துச்செல்வன் அசோக்குமார் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் சரண்யா நகராட்சி தலைவர் செல்வராணி, கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

