Skip to content
Home » புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

புதுகை அருகே நடுரோட்டில் வியாபாரி வெட்டிக்கொலை….

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள  பெரம்பூரை சேர்ந்தவர் மாதவன். இவர் அங்கு சிமென்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் கடை நடத்தி வருகிறார்.  இவருக்கு 3 மகன்கள். அதில் ஒரு மகன் மட்டும்  சொத்துக்களை பிரித்து தரும்படி கேட்டு உள்ளார்.  அதற்கு  மாதவன் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு மாதவன் கடையை திறக்க வந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த   சொத்து கேட்ட மகன், தந்தை   மாதவனை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அந்த இடத்திலேயே விழுந்து இறந்தார். இந்த கொடூரத்தை பார்த்த மக்கள்  மகன் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்கி அவரை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால் அவர் தப்பி ஓடிவிட்டார்.  இது குறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து  கொலைகாரனை தேடி வருகிறார்கள்.

மாதவனை கொலைசெய்த மகன் பெயர் சதீஷ்(25) என்றும், அவர்  சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!