திருச்சி மத்திய பஸ் நிலையம் பின்பகுதியில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சர் ஏ.டி. பன்னீர்செல்வம், தியாகராஜ பாகவதர் ஆகியோருக்கு மணிமண்டபங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அடுத்த தொடர்ந்து மூன்று பேர்களுக்கான மணி மண்டபங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டு தற்போது கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் முற்றிலுமாக புதர் மண்டி கிடைக்கிறது. இந்த கட்டுமான பணிகள் முடிந்து பின்னரும் இதுவரை திறக்கப்படவில்லை. மேலும் அருகில் டாஸ்மாக் மதுபானா கடை உள்ளதால் மணிமண்டப வளாகத்தினை சமூக விரோதிகள் அசுத்தம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வீர முத்தரையர் சங்கத்தின் நிறுவனத் தலைவர் செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சியினர் மணிமண்டப வளாகத்தை தூய்மைப்படுத்த போவதாக அறிவித்தனர்.
அறிவிப்பின் காரணமாக மணிமண்டபம் பகுதியில் முன்னெச்சரிக்கையாக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
பின்னர் தமிழர் தேசம் கட்சியின் மாநில செயலாளர் மகேஸ்வரன்,தலைமை ஒருங்கிணைப்பாளர் குரு மணிகண்டன்,
கொள்கை பரப்புச் செயலாளர் தளவாய் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மணிமண்டப வளாகத்தில் திரண்டு வந்தனர். அப்போது மாநகராட்சி பணியாளர் மூலமாக டிராக்டர் கொண்டு முத்தரையர் மணி மண்டப வளாகத்தை அவசர அவசரமாக சுத்தம் செய்வதை கண்டனர்.
அப்போது போராட்டக்காரர்களிடம் மாநகராட்சி நிர்வாகமே மணிமண்டப வளாகத்தை சுத்தம் செய்து விட்டது. நீங்கள் கலைந்து செல்லுங்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனாலும் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மணி மண்டபம் முன்பு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்பட 3 தலைவர்களின் மணிமண்டபங்களை உடனடியாக திறக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மணி மண்டபத்தை உடனடியாக திறக்காவிட்டால் தமிழர் தேசம் கட்சி சார்பில் மணிமண்டபத்தை தடையை மீறி திறக்கப்படும் என அறிவித்தனர்.