Skip to content

நாகையில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்….

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளை கீழ்வேளூர் வேதாரணியம் நாகை உள்ளிட்ட தாலுக்காவிற்கு உட்பட்ட பகுதியில் பணிபுரியும் வருவாய் துறை அலுவலர்கள் அனைத்து பணிகளையும் புறக்கணித்து போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடுகின்றனர். நாகை மாவட்டத்தில் வட்டாட்சியர்,துணை வட்டாட்சியர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட சுமார் 140 பேர்‌ இன்று பணிக்கு வராமல்

வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சேவைகளை பெற திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் காலை முதல் காத்திருக்கும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் நிலையில் அலுவலர்கள் பெருமளவில் வராததால் செய்வதறியாது திகைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!