200 ஆண்டுகளுக்கு முன் திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் சில சமூகத்தை சேர்ந்த பெண்கள் தோள்சீலை அணியக்கூடாது என்ற நடைமுறை இருந்தது. இந்த நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து 1822-ம் ஆண்டு தோள்சீலை அணியும் போராட்டத்தை பெண்கள் தொடங்கினர். பின்னர் இந்த போராட்டம் தீவிரமடைந்து இந்த முறையை நீக்க காரணமாக அமைந்தது. இதனை நினைவுப்படுத்தும் விதமாக 200-வது ஆண்டு நிறைவு தோள்சீலை போராட்ட பொதுக்கூட்டம் நாகர்கோவில் நாகராஜா திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அவருடன் கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொண்டு பேசுகிறார். இரு மாநில முதல் அமைச்சர்கள் பங்கேற்பதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
நாகர்கோவிலில் இன்று……தோள்சீலை போராட்ட 200ம் ஆண்டுபொதுக்கூட்டம்….ஸ்டாலின், பினராயி விஜயன் பங்கேற்பு
- by Authour
