Skip to content

நாமக்கல் அருகே முதிய தம்பதி தற்கொலை

  • by Authour
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள  ராசாம்பாளையம் டோல்கேட்  அருகே வசித்து வந்தவர்கள்  ரவி, வாசுகி. தம்பதியர். இவர்களுக்கு  60 வயதுக்கு மேல் இருக்கும். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் வெளிநாட்டில்  வசிக்கிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இவர்களது வீட்டில் ஆள் நடமாட்டடம் இல்லை.  இதனால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அப்போது வீடு பூட்டி கிடந்தது. உள்ளே அவர்கள் நடமாட்டம் இல்லை. இது குறித்து போலலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது   ரவி, வாசுகி தம்பதியர் இறந்து கிடந்தனர். சடலங்கள் துர்நாற்றம் வீசியது. அவர்கள் இறந்து 2 நாட்ள் இருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து  போலீசார் விசாரிக்கிறார்கள்.,
error: Content is protected !!