நான்காவது தேசிய கராத்தே போட்டி உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது.இப்போட்டியில், 30க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு சார்பில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகள் சிறப்பாக தங்களதுதிறனை வெளிப்படுத்தியதில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்ததுடன், 11 வயதுக்குட்பட்டோருக்கான குமித்தே பிரிவில், 45கிலோவிற்கு மேற்பட்ட எடைபிரிவில் திருச்சியைச் சேர்ந்த காவலரான தனசேகரன் என்பவரது மகள் தனன்யஸ்ரீ வெள்ளி பதக்கமும், பெல்நிறுவனத்தில் பணிபுரியும் ஹரிபாலன் என்பவரது மகள் சுபந்தனா 12வயதிற்குட்பட்ட, 45 கிலோ எடைபிரிவில் வெண்கல பதக்கமும் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடித்தந்தனர்.
பதக்கங்களை வென்று விமானம்மூலம் திருச்சி வந்தடைந்த இரு வீராங்கனைகளுக்கும் விமான நிலையத்தில் மக்கள் சக்தி இயக்க மாநிலப் பொருளாளர் கே.சி.நீலமேகம், தண்ணீர் அமைப்பு செயலாளர் . கி.சதீஸ்குமார், குடும்பத்தினர், உறவினர்கள்,பயிற்சியாளர்கள், சமூகநல அமைப்பினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் வருகைதந்து சால்வை மற்றும் மலர்மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
போட்டிகள் சவாலாக இருந்தாலும், சிறப்புடன்விளையாடி பதக்கங்களை குவித்ததாகவும், அடுத்துவரும் தேசிய மற்றும் சர்வதேசபோட்டிகளில் நிச்சயம் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமைதேடித்தருவோம் என வீராங்கனைகள் உறுதிபட தெரிவித்தனர்.