குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் பட்டவன் கோயில் திருவிழாவை தாதில் மாது நாயக்கர் மந்தை சார்பில் முன்னிட்டு மாடு தாண்டும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பசு மேக்கிப்பட்டியில் கோவில் திருவிழாவை முன்னிட்டு தாசில் மாது நாயக்கர் மந்தை சார்பில் மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் கரூர், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த 16 மந்தை மாடுகள் கலந்து கொண்டனர். முன்னதாக விழா குழுவினர் சார்பில் மந்தைகளுக்கு வரவேற்பு நிகழ்ச்சியில் மாடுகளுக்கு புனித நீர் தெளிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 16 மந்தைகளைச் சேர்ந்த சுமார் 300 க்கு மேற்பட்ட மாடுகள் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஓட்டிவரப்பட்டன. இதில் திருச்சி மாவட்டம் தொட்டியபட்டியை சேர்ந்த ஐந்து ஊர் மந்தை மாடு முதலாவதாகவும், இரண்டாவதாக புதுக்கோட்டை மாவட்டம் சேமங்கலத்தைச் சேர்ந்த அய்யாசாமி மந்தை நாயக்கர் மந்தை மாடும் வந்தன. எல்லை கோட்டை கடந்த முதல் மூன்று மாட்டிற்கும் மூன்று கன்னிப்பெண்கள் மஞ்சள் தூவி வரவேற்றனர். இதில் வெற்றி பெற்ற மாட்டின் மந்தைதாரர்களுக்கு எலுமிச்சை கனி பரிசாக வழங்கப்பட்டது.