பெண் ஊழியரிடம் ஆபாச பேச்சு.. மேனேஜர் சஸ்பெண்ட்
திருச்சி கன்டோன்மென்ட் பகுதியில் பிரபல ஓட்டல் ஒன்று உள்ளது.இந்த ஓட்டலில் மேலாளராக ஜீவானந்தம் என்பவர் வேலை பார்த்தார். அப்போது ஓட்டலில் வேலை பார்க்கும் பெண் ஊழியர்களிடம் அடிக்கடி ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் ஜீவானந்தத்தை ஓட்டல் நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கியது.இந்நிலையில் சம்பவத்தன்று ஹோட்டல் முன்பு வந்த ஜீவானந்தம் ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது .இதையடுத்து அந்த ஓட்டலில் வேலை பார்க்கும் இளம்பெண் ஒருவர் செசன்ஸ் கோர்ட் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் எஸ்ஐ பாரதி ஓட்டலின் முன்னாள் மேனேஜர் ஜீவானந்தம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குளியலறையில் வழுக்கி விழுந்து முதியவர் பரிதாப சாவு
கரூர் மாவட்டம் குளித்தலை அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் (வயது 80).இவர் தற்போது திருச்சி வி.என்.நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் தனது மகள் ஹேமலதாவின் வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று குளியலறைக்கு சென்ற இவர் குளியலறையில் மயங்கி விழுந்தார்.உடனே அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து அவரது மகள் ஹேமலதா அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து உடலை கைப்பற்றி,பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெட்டிக்கடையில் போதைப்பொருட்கள் பறிமுதல்… தாய், மகன் கைது
ஸ்ரீரங்கம் பகுதி பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருவரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் தாகூர் தெரு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்த திருவானைக்காவல் கீழே கொண்டையம்பேட்டை தாகூர் தெருவை சேர்ந்த கடல் கேசவன் மகன் ராஜ்குமார், கடல் கேசவனின் மனைவி ராமு ஆகிய இருவரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

