Skip to content

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்: பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்

  • by Authour

 இஸ்ரேல்,  ஈரான் இடையே போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில்,  இஸ்ரேலுக்கு ஆதரவாக  அமெரிக்கா  நேற்று , ஈரானில்  நேரடி தாக்​குதல் நடத்தியது.. ‘ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்’ (Operation Midnight Hammer) என்ற பெயரில் இந்த தாக்குதலை அரங்கேற்றியது.

அமெரிக்க விமானப் படை​யின் பி-2 ரகத்தை சேர்ந்த 7 போர் விமானங்​கள் அதி​காலை ஈரானின் போர்டோ அணுசக்தி தளத்தை குறி​வைத்து ஜிபி​யு-57 பங்​கர் ரக வெடிகுண்​டு​களை வீசின. ஒவ்​வொரு விமான​மும் தலா 2 குண்​டு​கள் என மொத்​தம் 14 குண்​டு​களை வீசின. இவை 90 மீட்​டர் ஆழத்​துக்கு பூமியை துளைத்து சென்​று, வெடித்து சிதறின. இதில், போர்டோ அணுசக்தி தளம் முற்​றி​லு​மாக சேதமடைந்​தது.

ஈரான் உடனே அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் என்ற  அமெரிக்க அதிபர் டிரம்ப்,  ஈரானின் தாக்குதலால் மத்திய கிழக்கில் ஆயிரக்கணக்கானோரை இழந்துள்ளோம். இனிமேலும் ஈரானின் அத்துமீறல்களை சகித்துக்கொள்ள முடியாது. ஈரான் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க போர் விமானிகளை பாராட்டுகிறேன்’ என்றார்.

உலகின் வேறு எந்த ராணுவத்தாலும் இதுபோன்ற தாக்குதல்களை நடத்த முடியாது. ஈரானின் அணுசக்தி தளங்களை அழித்த இஸ்ரேல் ராணுவத்தையும் பாராட்டுகிறேன். இவ்வாறு ட்ரம்ப் கூறினார். இதுபற்றி ஈரான் அதிபர் பெசெஷ்கியன் கூறும்போது, ‘‘அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். இக்கட்டான நேரத்தில் ஈரான் மக்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். எந்த சக்தியாலும் நம்மை தடுக்க முடியாது’’ என்றார்.

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, சீனா , சவுதி அரேபியா, உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். தற்போதைய சூழல் குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தோம்.

சமீபகால பதற்றங்கள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்தேன். பதற்றத்தை தணிப்பது, அமைதி பேச்சுவார்த்தை, ராஜதந்திர முயற்சிகள் மூலம் அமைதி, பாதுகாப்பு, நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினேன்.

ஈரானில் தங்கியிருந்த இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்ப தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்காக அதிபர் மசூத் பெசெஷ்கியனுக்கு நன்றி தெரிவித்தேன். வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் தொடர்ந்து இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் ஏற்றுமதியில் 20 சதவீதம் இந்த வழித்தடம் வழியாகத்தான் நடைபெறுகிறது. நாள் ஒன்றுக்கு 18 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் இந்த வழியாக செல்கிறது. கடந்த 2012-ம் ஆண்டு ஈரானுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித்தபோது, ஹோமுஸ் ஜலசந்தி வழித்தடத்தை மூடுப்போவதாக ஈரான் மிரட்டல் விடுத்தது. ஆனால், அதை செய்யவில்லை.

இதனால் இந்தியா மற்றும் ஒபெக் நாடுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இஸ்ரேல் – ஈரான் போர் தொடங்கியதில் இந்து இந்த வழியாக சென்ற 1000 கப்பல்களின் ஜிபிஎஸ் தொடர்பில் இடையூறுகள் ஏற்பட்டது. இப்பகுதியில் வர்த்தக கப்பல்களின் பாதுகாப்புக்காக பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஒரு பகுதி முகாமிட்டுள்ளது.

ஈரான் மீது தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இந்த வழியை ஈரான் மூடும் . அப்படி மூடினால்  எரிபொருள் விலை மிக கடூமையாக உயரும்

error: Content is protected !!