Skip to content

பெட்ரோல் தட்டுப்பாடு சீரானது.. தஞ்சை கலெக்டர் தகவல்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா பங்கஜம் இன்று வெளியிட்ட அறிவிப்பு பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்திகளால், தஞ்சாவூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததைக் காண முடிந்தது.

மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் எரிபொருள் நிலையங்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் டீசல் இருப்பு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.

எண்ணெய் நிறுவனங்கள் விநியோகத்தை நிறுத்திவிட்டதாகப் பரவிய தகவல்கள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என உறுதி செய்யப்பட்டுள்ளது.

“மாவட்டத்தில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே, பொதுமக்கள் பீதியடைந்து தேவைக்கு அதிகமான பெட்ரோலைச் சேமித்து வைக்க வேண்டாம்” என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

error: Content is protected !!