டாக்டர் ராமதாஸ் தொடங்கிய பாமக இப்போது 2ஆக பிரிந்து செயல்படுகிறது. இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் இன்று பாமக பொருளாளராக இருக்கும் திலகபாமாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி விட்டு சையது மன்சூர் உசேனை பொருளாளராக அறிவித்தார்.
இந்த நிலையில் அன்புமணி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் பாமக பொருளாளராக திலகபாமாவே தொடர்வார் என கூறி உள்ளார். அத்துடன் பாமக தலைவர் மருத்துவர் அன்புமதணி எ்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.
அன்புமணியை செயல் தலைவராக்கி விட்டதாக ராமதாஸ் அறிவித்தாலும், நானே பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் என அன்புமணி அறிவித்த நிலையில் அதை தனது அறிக்கையிலும் காட்டி உள்ளார்.
எனவே தற்போதைய நிலவரப்படி பாமக 2 பிரிவாகி விட்டது உறுதியாக தெரியவந்துள்ளது.
அன்புமணி கூட்டிய கூட்டத்தில் பாமக கவுரவ தலைவர் ஜிகே மணி எம்.எல்.ஏ., சேலம் அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொள்ளவில்லை