பொன்னேரி அருகே அவுரிவாக்கம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட தகராறில் 9 பேருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. பக்கத்து வீட்டை சேர்ந்த 2 குடும்பத்தை சேர்ந்தவர்கள் மாறி மாறி தாக்கி கொண்டதில் இருதரப்பும் காயமடைந்துள்ளனர். கட்டை, கத்தியால் தாக்கி கொண்டதில் பெண்கள் உட்பட9 பேருக்கு தலையில் தையல் போடப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

