கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையற்றத்தை திரும்ப பெற கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமானத் தொழிலின் அடிப்படை தேவையான எம்.சேண்ட், பி.சேண்ட், ஜல்லி, சிமெண்ட் உள்ளிட்ட அனைத்து கட்டுமான பொருட்களின் விலை கடந்த இரண்டு வருடங்களாக உயர்ந்து வருவதாகவும், இதன் காரணமாக கட்டுமான தொழிலில் மிகவும் பாதிக்கப்படுவதாகவும், நடுத்தர குடும்பத்தினர் வீடு கட்டுவது எட்டாக்கனியாக இருப்பதாகவும்,
எனவே உயர்த்தப்பட்டுள்ள கட்டுமான பொருட்களின் கடுமையான விலை ஏற்றத்தை திரும்ப பெற கோரியும், தமிழ்நாடு அரசு கட்டிட பொருள்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்டுமான பொறியாளர்கள், கட்டிட தொழிலாளர்கள், கட்டிட உரிமையாளர்கள் என 70-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.