Skip to content

புதுகையில், முட்புதர்களை எரித்தவர் தீயில் கருகி பலி

  • by Authour
புதுக்கோட்டை மாவட்டம் வாராப்பூர் ஊராட்சி நெம்மேலிப்பட்டி வருவாய் கிராமத்தில் குப்பையம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் (வயது 62) என்பவர் தனது தோட்டத்தில் முட்புதர்களைவெட்டி தீ வைத்து கொளுத்தினார். அப்போது   எதிர்பாராத விதமாக அவர் மீதும் சுற்றியுள்ள காய்ந்தமரங்கள் மீதும் தீ பற்றி எரிந்தது. இதில் நடராஜன் தீயின் நடுவில்  சிக்கிகொண்டார்.  தப்பி ஓட நினைத்தபோது அவர் மீதும் தீ பற்றியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே  இறந்துபோனார். தகவல் அறிந்த வாராப்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சதிஷ் குமார் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்குச் சென்று காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல்தெரிவித்தனர் .தீயணைப்புதுறையினர்விரைந்துவந்துதீயை கட்டுப்படுத்தி மேலும் பரவாமல் தடுத்தனர். இறந்த நடராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. செம்பட்டிவிடுதி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
error: Content is protected !!