Skip to content
Home » ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

ரேசன் கடையில் சரியான முறையில் பொருட்கள் தராததை கண்டித்து திடீர் ஆர்ப்பாட்டம்..

  • by Senthil

மயிலாடுதுறையை அடுத்த சோழசக்கரநல்லூர் ஊராட்சி மொழையூர் கிராமத்தில் மொழையூர் மேலவெளி, மண்தாங்கி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 643 குடும்ப அட்டைகளுக்கான ரேஷன் அங்காடி உள்ளது. இதில் அரசினால் வழங்கப்படும் இலவச அரிசி, மானிய விலையில் விற்கப்படும் சர்க்கரை, சமையல் எண்ணெய், மண்ணெண்ணெய் போன்ற பொருட்களை கடந்த மூன்று மாதமாக சரிவர வழங்காததைக் கண்டித்து அந்த பகுதி மக்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த மூன்று மாதங்களாக வழங்கப்படாத சமையல் எண்ணெய்க்கான மெசேஜ் ஆனது குடும்ப அட்டைதாரர் பதிவு செய்துள்ள அலைபேசி எண்ணுக்கு வழங்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது, 35 கிலோ வழங்கப்படும் அரிசிதாரருக்கு 30 கிலோ மட்டுமே

வழங்கிவிட்டு 35 கிலோ வாங்கியதாக மெசேஜ் வந்துள்ளது. குறைந்த அளவிலான நுகர்வோர்கள் பொருட்கள் வாங்க வந்தால் அன்றைய தினம் மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்படாது என்று ஊழியர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, ஊழியர்களை கேட்ட பொழுது சுற்றி உள்ள எந்த ரேஷன் கடையிலும் சமையல் எண்ணெய் இருப்பு இல்லாததால் வழங்கப்படவில்லை என்று கூறினார். காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இன்னும் மூன்று நாட்களுக்குள் அனைத்து பொருட்களும் சரியான முறையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை
விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!