Skip to content
Home » கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

கடத்தல்கார்கள் விட்டு சென்ற ரேஷன் அரிசி மூட்டைகள்..திருச்சி அருகே பரபரப்பு..

  • by Senthil

திருச்சி மாநகராட்சி 40 வது வார்டுக்கு உட்பட்ட திருவெறும்பூர் அருகே மலைக்கோவில் ராஜவீதியில் சாலையில் 9 மூட்டைகளில் ரேஷன் அரிசி கடப்பதாக திருவெறும்பூர் வட்ட வழங்க அலுவலர் நாகலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு திருவெறும்பூர் போலீசார் உடன் விரைந்து சென்று பார்த்த பொழுது சாலையில் 9 மூட்டை ரேஷன் அரிசி கிடப்பது தெரிய வந்தது. மேலும் அந்த அரிசி மூட்டைகள் கிடந்த இடத்தின் அருகே உள்ள வீட்டில் மூன்று மூட்டை ரேஷன் அரிசி கிடந்தது தெ ரியவந்தது. இது தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரிடம் கேட்ட பொழுது, அவர் தான் வெளியில் சென்று இருந்ததாகவும் யாரோ மர்ம நபர்கள் கேட்டை திறந்து தனது வீட்டு வாசலுக்குள் போட்டுள்ளதாகவும் இந்த அரிசிக்கும் மூட்டைக்கும் தனக்கும் சம்மந்தம் இல்லை என மலுப்பலாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் அந்த 9 மூட்டை ரேசன் அரிசியையும் திருவெறும்பூர் வட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!